பிரதமர் அலுவலகம்

பாரிஸ் ஒலிம்பிக் 2024 -ல் ஆடவர் 50 மீட்டர் ரைஃபிள் 3 பிரிவில் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றதை பிரதமர் கொண்டாடினார்

Posted On: 01 AUG 2024 2:38PM by PIB Chennai

பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் ஆடவர் 50 மீட்டர் ரைஃபிள் 3 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"ஸ்வப்னில் குசாலேவின் சிறப்பான பங்களிப்பு! பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் ஆடவர் 50 மீட்டர் ரைஃபிள் 3 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள்
 

அவரது பங்களிப்பு சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், அவர் சிறந்த திறன்களை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

 

***


(Release ID: 2040111)

IR/RS/KR



(Release ID: 2040244) Visitor Counter : 31