நிதி அமைச்சகம்

பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க மத்திய பட்ஜெட்டில் அரசு உத்தரவாதம்

Posted On: 23 JUL 2024 12:50PM by PIB Chennai

பெண்கள் மற்றும் சிறுமிகள் பலனடையும் வகையிலான திட்டங்களுக்கு, பட்ஜெட்டில் ரூ.3.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு முக்கியத்தரப்பினரில் ஒரு பகுதியான பெண்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என, இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்ததை நினைவுகூர்ந்த அவர், மதம், ஜாதி, பாலினம், வயது பாகுபாடின்றி அனைத்து இந்தியர்களின் நிலையான முன்னேற்றத்திற்கும் அரசு உறுதிபூண்டுள்ளதாக கூறினார்.

தொழில்துறையினரின் ஒத்துழைப்புடன், மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களை ஏற்படுத்துவதன் வாயிலாக, பெண்கள் அதிகளவில் வேலையில் சேர்வதற்கு அரசு உதவி செய்யும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார். மேலும் பெண்களுக்கென திறன்மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதுடன், மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தவும் உதவி செய்யப்படும் என அவர் கூறினார்.

***

(Release ID: 2035567)

MM/AG/KR



(Release ID: 2035749) Visitor Counter : 13