பிரதமர் அலுவலகம்

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்தியக் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடல்

Posted On: 04 JUL 2024 8:36PM by PIB Chennai

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் கலந்துரையாடினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக பாரீஸ் செல்லும் நமது குழுவினருடன் கலந்துரையாடினேன். நமது விளையாட்டு வீரர்கள், தங்களது சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி இந்தியாவை பெருமைப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களின் வாழ்க்கைப் பயணமும், வெற்றியும் 140 கோடி இந்தியர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.”

***

(Release ID: 2030847)

SMB/BR/RR



(Release ID: 2030899) Visitor Counter : 19