மத்திய அமைச்சரவை

2024-25 சந்தைப் பருவத்திற்கு கரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 19 JUN 2024 7:55PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (19.06.2024) நடைபெற்ற மத்திய அமைச்சரவை, 2024-25 சந்தைப் பருவத்திற்கு  கரீஃப் பயிர்களுக்கான  குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகளுக்கு  சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டுக்கு அதிக அளவில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு  பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி எள்ளின் விலை  குவிண்டாலுக்கு ரூ. 632-ம், காட்டு எள்ளின்  (நைகர் சீட்) விலை குவிண்டாலுக்கு ரூ. 983-ம், துவரம்பருப்பு  குவிண்டாலுக்கு ரூ. 550-ம் அதிகரிக்கும்.

நெல்லின் விலை குவிண்டாலுக்கு ரூ. 117-ம், சோளம் விலை குவிண்டாலுக்கு ரூ. 191-ம், கேழ்வரகு விலை குவிண்டாலுக்கு ரூ. 444-ம், மக்காச்சோளம் விலை குவிண்டாலுக்கு ரூ. 135-ம், பயத்தம் பருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ. 124-ம் அதிகரிக்கும்.

எண்ணெய் வித்துகளை பொறுத்தவரை நிலக்கடலை விலை குவிண்டாலுக்கு ரூ. 406-ம், சூரியகாந்தி விதையின் விலை குவிண்டாலுக்கு ரூ. 520-ம், சோயாபீன் (மஞ்சள்) விதையின் விலை குவிண்டாலுக்கு ரூ. 292-ம் அதிகரிக்கும்.

நடுத்தர இழை மற்றும் நீள இழை பருத்தியின் விலை குவிண்டாலுக்கு ரூ. 501 அதிகரிக்கும்.

அகில இந்திய அளவில் சராசரி உற்பத்தி செலவில் குறைந்தபட்சம் 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பது என மத்திய பட்ஜெட் 2018-19-ல்  அறிவிக்கப்பட்டதற்கு ஏற்ப, 2024-25 சந்தைப் பருவத்தில் கரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2026697

--------------

AD/SMB/RS/DL



(Release ID: 2026743) Visitor Counter : 167