சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக டாக்டர் வீரேந்திர குமாரும், இணையமைச்சராக திரு ராம்தாஸ் அத்வாலேயும் பொறுப்பேற்றுக்கொண்டனர்

Posted On: 11 JUN 2024 4:19PM by PIB Chennai

மத்திய சமூக நீதி  மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக டாக்டர் வீரேந்திர குமார் இன்று புதுதில்லியில் பொறுப்பேற்றுக்கொண்டார். இணையமைச்சராக  திரு ராம்தாஸ் அத்வாலேயும் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் இந்த அமைச்சகம் இதுவரை செய்துள்ள சாதனைகள் குறித்து  இணையமைச்சர்களான திரு ராம்தாஸ் அத்வாலே, திரு பி எல் வர்மா ஆகியோருடன் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் விவாதித்தார். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்கால திட்டம் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர்கள் பொறுப்பேற்கும் நிகழ்வில், அமைச்சகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த  அதிகாரிகள் பங்கேற்றனர்.

***

 

SMB/RS/DL



(Release ID: 2024370) Visitor Counter : 23