பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் சூரிய இல்லம் இலவச மின்சார திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பதிவு செய்துள்ளதாக பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 16 MAR 2024 9:19AM by PIB Chennai

பிரதமரின் சூரிய இல்லம்: இலவச மின்சாரத் திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பதிவு செய்திருப்பது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

இது ஒரு சிறப்பான செய்தி!

"தொடங்கப்பட்ட சுமார் ஒரு மாதத்தில், 1 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் ஏற்கனவே பிரதமரின்-சூரிய இல்லம்: இலவச மின்சாரத் திட்டத்தில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பதிவுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அசாம், பீகார், குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

இதுவரை பதிவு செய்யாதவர்களும் விரைவில் பதிவு செய்ய வேண்டும்.

pmsuryaghar.gov.in

"இந்த முயற்சி எரிசக்தி உற்பத்தியை உறுதி செய்வதுடன், வீடுகளுக்கான மின்சார செலவு கணிசமாகக் குறைவதை உறுதிசெய்கிறது. இது சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறையை (லைஃப்) ஒரு பெரிய அளவில் ஊக்குவிக்க தயாராக உள்ளது, இது புவியின் நன்மைக்கும் பங்களிக்கிறது

***

ANU/AD/BS/DL


(रिलीज़ आईडी: 2015168) आगंतुक पटल : 185
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam