பிரதமர் அலுவலகம்

வதோதராவின் ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 18 JAN 2024 7:50PM by PIB Chennai

வதோதராவில் உள்ள ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில்  உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும்காயமடைந்தவர்களுக்குத் தலா  ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். 

சமூக ஊடக  எக்ஸ் தள  பதிவில் பிரதமர் அலுவலகம்  தெரிவித்திருப்பதாவது:

"வதோதராவில் உள்ள ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில்  உயிரிழப்பை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்தத் துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத்  தேவையான அனைத்து உதவிகளையும் உள்ளூர் நிர்வாகம் செய்து வருகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின்  தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம்  உதவித்தொகையாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர்

***

ANU/SMB/BR/KV



(Release ID: 1997805) Visitor Counter : 72