பிரதமர் அலுவலகம்

நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடுவதற்கும் வளர்ப்பதற்கும் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு போன்ற மன்றங்கள் இன்றியமையாதவை: பிரதமர்

Posted On: 08 DEC 2023 9:38PM by PIB Chennai

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்ச்சியின்  ஒரு சில காட்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்ச்சிக்கு இன்று வருகை தந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தைக்  கொண்டாடுவதற்கும், வளர்ப்பதற்கும் இதுபோன்ற மன்றங்கள் இன்றியமையாதவை. இந்திய பாரம்பரியங்களின் துடிப்பான பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், ஊக்குவிக்கவும் படைப்பாளிகளுக்கு அவை ஒரு தனித்துவமான தளத்தை வழங்குகின்றன.”

----------


ANU/AD/RB/DL



(Release ID: 1984711) Visitor Counter : 53