பிரதமர் அலுவலகம்

சந்திரயான்-3-ன் உந்துவிசைத் தொகுதி வெற்றிகரமாக மாற்றுப்பாதையில் சென்றதற்காக இஸ்ரோவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 06 DEC 2023 8:27PM by PIB Chennai

விண்வெளியில் மற்றொரு தொழில்நுட்ப மைல்கல்லை எட்டியுள்ள இஸ்ரோவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சந்திரயான்-3 -ன் உந்துவிசைத் தொகுதி வெற்றிகரமாக மாற்றுப்பாதையில் சென்றது. மற்றொரு தனித்துவமான பரிசோதனையில், உந்துவிசைத் தொகுதி நிலவின்  சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் சுற்றுப்பாதைக்குக் கொண்டு வரப்பட்டது.


இஸ்ரோவின் சமூக ஊடகப் பதிவுக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது; 
“வாழ்த்துக்கள் இஸ்ரோ  @isro. 2040 ஆம் ஆண்டுக்குள் ஒரு இந்தியரை நிலவுக்கு அனுப்பும் இலக்கு உட்பட நமது எதிர்கால விண்வெளி முயற்சிகளில் மற்றொரு தொழில்நுட்ப மைல்கல் எட்டப்பட்டுள்ளது."

****** 
 



(Release ID: 1983413) Visitor Counter : 99