பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் சேதங்கள் குறித்து பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2023 10:29AM by PIB Chennai

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

நேபாள மக்களுடன் இந்தியா ஒன்றுபட்டு  நிற்கிறது என்றும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக  எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் சேதம் குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். நேபாள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எமது எண்ணங்கள் உள்ளன, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றோம். @cmprachanda"

 

****  

PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1974650) வருகையாளர் எண்ணிக்கை : 151