பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தேக் சந்த் மஹ்லாவத்திற்குப் பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
28 OCT 2023 8:32PM by PIB Chennai
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல்-எஃப் 55 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தேக் சந்த் மஹ்லாவத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மஹ்லாவத்தின் செயல்திறனைப் பாராட்டியுள்ள அவர், இது அவரது உறுதியையும் சிறப்பையும் வெளிப்படுத்தியுள்ளது என்றும் இது தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஆண்களுக்கான ஈட்டி எறிதல்-எஃப் 55 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தேக் சந்த் மஹ்லாவத்திற்கு எனது வாழ்த்துகள்.
இந்த செயல்பாடு அவரது உறுதியையும் சிறப்பையும் வெளிப்படுத்துகிறது, மேலும் இது நமது தேசத்திற்கு பெரும் பெருமையை அளிக்கிறது.”
********
Release ID=1972657
(रिलीज़ आईडी: 1972794)
आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada