பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ருத்ரன்ஷ் கண்டேல்வாலுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
24 OCT 2023 5:56PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.ஹெச்.1 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் ருத்ரன்ஷ் கண்டேல்வாலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற ருத்ரன்ஷ் கண்டேல்வாலுக்கு வாழ்த்துகள்.
பி1 - ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.ஹெச் 1 பிரிவில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான செயல்திறன், அவரது துல்லியம் மற்றும் பயிற்சியின் பலனாகும்.
இந்த அற்புதமான சாதனையை இந்தியா கொண்டாடுகிறது.”
AD/PKV/BR/KRS
(Release ID: 1970656)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam