பிரதமர் அலுவலகம்

அகமதாபாத்தில் தேசிய மருந்துக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டதற்கு பிரதமர் வாழ்த்துச் செய்தி

Posted On: 30 SEP 2023 8:46PM by PIB Chennai

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா, அகமதாபாத்தில் தேசிய மருந்துக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி வைக்கப்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் சக்திவாய்ந்த பாலமாக செயல்படுவதன் மூலம் மருந்துத் துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதில் என்ஐபிஇஆர், அகமதாபாத் முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

"அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் வலுவான பாலமாக மாறி, மருந்து தயாரிப்புத் துறையில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வதில் அகமதாபாத்தைச் சேர்ந்த என்ஐபிஇஆர் முக்கியப் பங்கு வகிக்கும் என்று நான் நம்புகிறேன். நல்வாழ்த்துகள்! "

***

ANU/AD/KB/AG/KPG

 

 



(Release ID: 1963812) Visitor Counter : 54