பிரதமர் அலுவலகம்
ஸ்கீட் ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனந்த் ஜீத் சிங் நருகாவுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
27 SEP 2023 8:44PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்கீட் ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனந்த் ஜீத் சிங் நருகாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒரு எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;
‘’ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நமது வீரர்கள் தொடர்ந்து வரலாறு படைத்து வருகின்றனர்.
ஸ்கீட் ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம் வென்ற அனந்த் ஜீத் சிங் நருகாவுக்கு வாழ்த்துக்கள். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தப் பிரிவில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.
இந்த வெற்றி வரும் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கட்டும்’’.
***
ANU/AD/PKV/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1961509)
வருகையாளர் எண்ணிக்கை : 136
இந்த வெளியீட்டை படிக்க:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam