பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி நிலைத்தன்மை மற்றும் தூய்மையான எரிசக்தியை நோக்கிய நமது தேடலில் ஒரு திருப்புமுனை தருணத்தைக் குறிக்கிறது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2023 6:49PM by PIB Chennai

உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியில் இணைந்த உறுப்பு நாடுகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியின் தொடக்கம் நிலைத்தன்மை மற்றும் தூய்மையான எரிசக்தியை நோக்கிய தேடலில் ஒரு திருப்புமுனை தருணத்தைக் குறிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் திரு. ஹர்தீப் பூரிபதிவைப் பகிர்ந்து, பிரதமர் கூறியுள்ளதாவது;

"உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியின் தொடக்கம் நிலைத்தன்மை மற்றும் தூய்மையான எரிசக்தியை நோக்கிய நமது  தேடலில் ஒரு திருப்புமுனை தருணத்தைக் குறிக்கிறது.

இந்த கூட்டணியில் இணைந்த உறுப்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’.

----

ANU/SM/PKV/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1955897) வருகையாளர் எண்ணிக்கை : 215