பிரதமர் அலுவலகம்
மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
இந்தக் கடினமான நேரத்தில் இயன்ற அனைத்து உதவிகளையும் மொரோக்கோவுக்கு செய்ய இந்தியா தயாராக உள்ளதாக தெரிவித்தார்
प्रविष्टि तिथि:
09 SEP 2023 8:39AM by PIB Chennai
மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடினமான நேரத்தில் இயன்ற அனைத்து உதவிகளையும் மொரோக்கோவுக்கு செய்ய இந்தியா தயாராக உள்ளது என்றும் திரு மோடி கூறினார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பிரதமர் கூறியதாவது:
"மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன். இந்த துயரமான நேரத்தில், மொரோக்கோ மக்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்தக் கடினமான நேரத்தில் இயன்ற அனைத்து உதவிகளையும் மொரோக்கோவுக்கு செய்ய இந்தியா தயாராக உள்ளது.”
***
SM/ANU/RB/DL
(रिलीज़ आईडी: 1955727)
आगंतुक पटल : 268
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam