பிரதமர் அலுவலகம்

3 கோடியாக இருந்த குழாய் குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 13 கோடியை எட்டியதை பிரதமர் பாராட்டியுள்ளர்

Posted On: 05 SEP 2023 7:59PM by PIB Chennai

வெறும் 4 ஆண்டுகளில் 3 கோடியிலிருந்து 13 கோடியை எட்டியதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜல் ஜீவன் இயக்கம் மக்களுக்கு சுத்தமான தண்ணீரை கிடைக்கச் செய்வதிலும், மக்களின் வாழ்க்கை மற்றும் பொது சுகாதாரத்தை எளிதாக்குவதிலும் ஒரு மைல்கல்லாக நிரூபித்து வருகிறது என்றும் பிரதமர் கூறினார்.

 

 

மத்திய அமைச்சர் ஸ்ரீ கஜேந்திர சிங் ஷெகாவத்தின் பதிவுக்குப் சமூக வலைதள எக்ஸ் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி,  "இந்த அற்புதமான சாதனைக்கு வாழ்த்துகள்! கிராமப்புற இந்தியாவில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதில் 'ஜல் ஜீவன் இயக்கம்' ஒரு மைல்கல்லை நிரூபிக்கப் போகிறது. இது அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவியாக இருக்கும். ", அவர்களின் சிறந்த ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

(வெளியீட்டு ஐடி: 1954954)

 

AD/BS/KRS



(Release ID: 1955007) Visitor Counter : 103