பிரதமர் அலுவலகம்

குளோபல் ஃபைனான்ஸ் சென்ட்ரல் பேங்கர் ரிப்போர்ட் கார்டு 2023ல் “A+” தரப்படுத்தப்பட்டதற்காக சக்திகாந்த தாஸை பிரதமர் வாழ்த்தினார்

Posted On: 01 SEP 2023 8:17PM by PIB Chennai

குளோபல் ஃபைனான்ஸ் சென்ட்ரல் பேங்கர் ரிப்போர்ட் கார்டுகள் 2023ல், ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு சக்திகாந்த தாஸ் A+ என மதிப்பிடப்பட்டதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மதிப்பிடப்பட்ட மூன்று மத்திய வங்கி கவர்னர்கள் பட்டியலில் திரு தாஸ் முதலிடத்தில் உள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் சமூக ஊடகப் பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு;

"ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு சக்திகாந்த தாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள். இது இந்தியாவிற்கு பெருமையான தருணம், உலக அரங்கில் நமது நிதித் தலைமையை பிரதிபலிக்கிறது. அவருடைய அர்ப்பணிப்பும் தொலைநோக்குப் பார்வையும் நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையை தொடர்ந்து வலுப்படுத்துகிறது."

 

***

AD/PKV/KRS



(Release ID: 1954246) Visitor Counter : 101