பிரதமர் அலுவலகம்

மீன் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு வலுவான முக்கியத்துவம் அளித்து மீன்வளத் துறையை துடிப்புமிக்கதாக உருவாக்க அரசு தொடர்ந்து பணியாற்றும்: பிரதமர்

Posted On: 10 JUL 2023 9:29PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, மீன் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு வலுவான முக்கியத்துவம் அளித்து, மீன்வளத் துறையை துடிப்புமிக்கதாக உருவாக்க அரசு தொடர்ந்து பணியாற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மீன் விவசாயிகள் தினத்தையொட்டி மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலாவின் ட்வீட்டைப் பகிர்ந்து பிரதமர் ட்வீட் செய்துள்ளதாவது:

மீன் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த அதிகக்கடன், சிறந்த சந்தைகள் போன்றவற்றின் மூலம் வலுவான முக்கியத்துவம் அளித்து, மீன்வளத் துறையை துடிப்புமிக்கதாக உருவாக்க அரசு தொடர்ந்து பணியாற்றும்.  

***

AD/ANT/GK



(Release ID: 1938657) Visitor Counter : 131