பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிராவின் துலேவில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்
Posted On:
04 JUL 2023 9:40PM by PIB Chennai
மகாராஷ்டிராவின் துலேவில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“மகாராஷ்டிராவின் துலேவில் ஏற்பட்ட விபத்தை அறிந்து மிகவும் வருந்துகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்திக்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi”
***
AD/RB/DL
(Release ID: 1938261)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam