பிரதமர் அலுவலகம்

அமெரிக்காவில் உள்ள இந்திய சமூக பிரதிநிதிகளுடன் பிரதமர் உரையாடல்

Posted On: 24 JUN 2023 7:30AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 23 அன்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ரொனால்ட் ரீகன் மையத்தில் இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடினார்.

பிரதமர் தமது உரையில், அமெரிக்காவில் அந்தந்த துறைகளில் வெற்றி பெற்றதற்காக இந்திய சமூக பிரதிநிதிகளை வாழ்த்தினார். மேலும் அமிர்த காலத்தின் போது இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிக்குமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இருதரப்பு கூட்டுறவின் எதிர்கால அம்சங்களை விளக்கினார்.

***

AD/PKV/DL



(Release ID: 1934992) Visitor Counter : 149