பிரதமர் அலுவலகம்
தேசிய நெடுஞ்சாலை 334 பி-இல் 40.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலைத்தன்மை வாய்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு பிரதமர் பாராட்டு
Posted On:
14 JUN 2023 9:45PM by PIB Chennai
நிலைத்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை 334 பி-இல் 40.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெகிழி கழிவுகள் மற்றும் சாம்பல் போன்றவை பயன்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக குறைந்த செலவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம்- ஹரியானா எல்லை அருகே உள்ள பாக்பாத்திலிருந்து ஹரியானாவின் ரோனா வரை இந்தப் பாதை அமைந்துள்ளது.
மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரியின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“நிலையான வளர்ச்சி மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைப்பின் மிகச்சிறந்த கலவை. பொருளாதார வளர்ச்சியையும் இது ஊக்குவிக்கும்.”
***
(Release ID: 1932441)
PKV/BR/RR
(Release ID: 1932495)
Visitor Counter : 128
Read this release in:
Bengali
,
Assamese
,
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam