பிரதமர் அலுவலகம்

மைசூரு மற்றும் தன்பாத்தில் நிகழ்ந்த விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 29 MAY 2023 8:37PM by PIB Chennai

மைசூரு மற்றும் தன்பாத்தில் நிகழ்ந்த விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் எனவும் பிரதமர் திரு  நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :-

“கர்நாடகா மாநிலம் மைசூருவில் கோர விபத்து நிகழ்ந்திருப்பது அறிந்து வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருடன்  எனது எண்ணங்கள் துணை நிற்கும். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வேகமாக குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர்”

“தன்பாத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது, துரதிஷ்டவசமானது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர்”

“மைசூரு மற்றும் தன்பாத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.”

******

(Release ID: 1928152)

AD/ES/MA/KRS



(Release ID: 1928535) Visitor Counter : 137