பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

திரு கேஷப் மஹிந்திராவின் மறைவிற்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 12 APR 2023 7:57PM by PIB Chennai

வணிகத் துறையில் பிரபல ஆளுமையாக விளங்கிய திரு கேஷப் மஹிந்திராவின் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“திரு கேஷப் மஹிந்திரா அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். வணிக உலகில் அவரது பங்களிப்பிற்காகவும், கொடை குணத்திற்காகவும் அவர் என்றும் நினைவில் கொள்ளப்படுவார். அன்னாரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி: பிரதமர் @narendramodi”

******

SMB/BR/KPG



(Release ID: 1916162) Visitor Counter : 133