பிரதமர் அலுவலகம்

வடகிழக்குப் பகுதிகள், முன்னணி சுற்றுலாத் தலமாக வளர்ந்து வருவதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

Posted On: 04 APR 2023 10:12AM by PIB Chennai

வடகிழக்குப் பகுதிகள், முன்னணி சுற்றுலாத் தலமாக வளர்ந்து வருவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சுற்றுலா வளர்ச்சியால் அப்பகுதியில் வளங்களும் மேம்படும் என்றும் திரு மோடி தெரிவித்தார்.

கடந்த 2022-ஆம் ஆண்டில் 11.8 மில்லியன் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளும், சுமார் ஒரு லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வடகிழக்குப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்திருந்ததைப் பற்றி மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியின் தொடர் ட்விட்டர் பதிவுகளுக்கு பதில் அளித்து பிரதமர் கூறியதாவது:

“மகிழ்ச்சி அளிக்கும் போக்கு. சுற்றுலா வளர்ச்சி, அப்பகுதியில் செழிப்பை அதிகரிக்கும் என்பதைக் குறிக்கிறது.”

----

AP/RB/KPG

 



(Release ID: 1913528) Visitor Counter : 157