பிரதமர் அலுவலகம்

இதுவரை இல்லாத அளவுக்கு எச்ஏஎல் நிறுவனம் அதிக வருவாய் ஈட்டியதற்கு பிரதமர் பாராட்டு

Posted On: 01 APR 2023 9:21AM by PIB Chennai

இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருவாய் ஈட்டியதற்காக எச்ஏஎல் நிறுவனத்திற்கும், அதன் குழுவினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் ரூ.24,620 கோடியாக இருந்த வருவாய்2022-23 நிதியாண்டில் சுமார் ரூ.26,500 கோடியாக (தற்காலிக மற்றும் தணிக்கை செய்யப்படாத) அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் 8% வருவாய் வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பான எச்ஏஎல் நிறுவனத்தின்  ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;

‘’ அற்புதமான சாதனை! எச்ஏஎல் நிறுவனத்தின்  முழு குழுவின் அருமையான  ஆர்வத்தையும், செயல்பாட்டையும்  நான் பாராட்டுகிறேன்."

**********

AD/PKV/DL



(Release ID: 1912780) Visitor Counter : 140