பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் கூட சுகாதார உள்கட்டமைப்பு பெருமளவு மேம்படுத்தப்பட்டுள்ளதைக் காண்பது திருப்தியளிக்கிறது: பிரதமர்

प्रविष्टि तिथि: 06 MAR 2023 8:24PM by PIB Chennai

நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் கூட சுகாதார உள்கட்டமைப்பு பெருமளவு மேம்படுத்தப்பட்டுள்ளதைக் காண்பது திருப்தியளிப்பதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமர் தொடங்கி வைத்த தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள சுகாதாரப் புரட்சி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மக்களவை உறுப்பினர் டாக்டர் நிஷிகந்த் துபேவுக்கு பதிலளித்து திரு.மோடி கூறியிருப்பதாவது;

“இன்றைய இணையவழிக் கருத்தரங்கில் நான் சுகாதாரத் துறையின் முன்னேற்றம் பற்றிப் பேசினேன். நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் கூட சுகாதார உள்கட்டமைப்பில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் காண்பது திருப்தி அளிக்கிறது, இதுவும் ஒரு எடுத்துக்காட்டு”.

***

(Release ID: 1904681)

AP/IR/RR


(रिलीज़ आईडी: 1904811) आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam