பிரதமர் அலுவலகம்
நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் கூட சுகாதார உள்கட்டமைப்பு பெருமளவு மேம்படுத்தப்பட்டுள்ளதைக் காண்பது திருப்தியளிக்கிறது: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
06 MAR 2023 8:24PM by PIB Chennai
நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் கூட சுகாதார உள்கட்டமைப்பு பெருமளவு மேம்படுத்தப்பட்டுள்ளதைக் காண்பது திருப்தியளிப்பதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதமர் தொடங்கி வைத்த தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள சுகாதாரப் புரட்சி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மக்களவை உறுப்பினர் டாக்டர் நிஷிகந்த் துபேவுக்கு பதிலளித்து திரு.மோடி கூறியிருப்பதாவது;
“இன்றைய இணையவழிக் கருத்தரங்கில் நான் சுகாதாரத் துறையின் முன்னேற்றம் பற்றிப் பேசினேன். நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் கூட சுகாதார உள்கட்டமைப்பில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் காண்பது திருப்தி அளிக்கிறது, இதுவும் ஒரு எடுத்துக்காட்டு”.
***
(Release ID: 1904681)
AP/IR/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1904811)
வருகையாளர் எண்ணிக்கை : 230
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam