பிரதமர் அலுவலகம்

ஃபாக்ஸ்கான் தலைவருடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 01 MAR 2023 1:22PM by PIB Chennai

ஹான் ஹாய் தொழில்நுட்பக் குழுமத்தின் (ஃபாக்ஸ்கான்) தலைவர் திரு யங்  லியூவைப் புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புச் சூழலை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் பல்வேறு தலைப்புகளில் அவர்கள் விவாதம் நடத்தினர்.

ஹான் ஹாய் தொழில்நுட்பக் குழுமத்தின் (ஃபாக்ஸ்கான்) வெளியிட்ட ட்விட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர்  செய்தியில் கூறியிருப்பதாவது:

“திரு யங் லியூவுடன் நல்லதொரு சந்திப்பைப் பெற்றிருந்தேன் இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புச் சூழலை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் பல்வேறு தலைப்புகளில் எங்களின் விவாதம் அமைந்திருந்தது”.       

***

AP/SMB/JS/KPG



(Release ID: 1903347) Visitor Counter : 150