பிரதமர் அலுவலகம்
உலக வங்கிக் குழுத் தலைவர் திரு டேவிட் மால்பாசுடன் பிரதமர் கலந்துரையாடல்
Posted On:
23 FEB 2023 1:00PM by PIB Chennai
உலக வங்கிக் குழுத் தலைவர் திரு டேவிட் மால்பாசுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் கலந்துரையாடினார். இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். குறிப்பாக வளர்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் எதிர்காலத்துறைகள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர். அமிர்த காலத்தின் இந்தியா நீடித்த உயர் வளர்ச்சி அடைவதற்கான ஆதரவை உலக வங்கி வழங்கும் என திரு டேவிட் மால்பாஸ் உறுதி அளித்தார்.
திரு டேவிட் மால்பாசின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளிக்கும் வகையில், திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் கூறியிருப்பதாவது:
“உங்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து, குறிப்பாக வளர்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான எதிர்கால துறைகள் குறித்து மிகச் சிறப்பான ஆலோசனை நடத்தினேன். @DavidMalpassWBG”
***
(Release ID: 1901905)
(Release ID: 1902119)
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam