பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விசாகப்பட்டினத்துடன் செகந்திராபாத்தை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை ஜனவரி 15-ம் தேதி பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்

प्रविष्टि तिथि: 13 JAN 2023 4:56PM by PIB Chennai

விசாகப்பட்டினத்துடன் செகந்திராபாத்தை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை ஜனவரி 15-ம் தேதி காலை 10.30 மணிக்கு பிரதமர் காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.

இந்த சேவை, இந்திய ரயில்வேத் துறையால் இயக்கப்படும் 8-வது வந்தே பாரத் விரைவு ரயில் சேவையாகும். தெலுங்கு மொழி பேசும் தெலங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களை சுமார் 700 கிலோ மீட்டர் அளவிற்கு இணைக்கும் முதல் ரயில் சேவை இது   என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வந்தே பாரத் விரைவு ரயில், ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா ரயில் நிலையங்களிலும், தெலங்கானா மாநிலத்தில் கம்மம், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணிகளுக்கு உயர்தர வசதிகள் மற்றும் வேகமான, சொகுசான பயணம் அமையும்.

***

AP/GS/KPG/RJ


(रिलीज़ आईडी: 1891041) आगंतुक पटल : 209
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Odia , Telugu , Malayalam