பிரதமர் அலுவலகம்
நாசிக்-ஷீரடி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு அறிவிப்பு
Posted On:
13 JAN 2023 12:00PM by PIB Chennai
நாசிக்-ஷீரடி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்படும் என திரு மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"நாசிக்-ஷீரடி நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு குறித்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். உயிரிந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர் மோடி’’
***
PKV/RR
(Release ID: 1890924)
Visitor Counter : 161
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam