பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

நாசிக்-ஷீரடி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு அறிவிப்பு

Posted On: 13 JAN 2023 12:00PM by PIB Chennai

நாசிக்-ஷீரடி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில்  இருந்து இழப்பீடு வழங்கப்படும் என திரு  மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள  ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"நாசிக்-ஷீரடி நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு குறித்து  வேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். உயிரிந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து  தலா ரூ. 2 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000  வழங்கப்படும்: பிரதமர் மோடி’’

***

PKV/RR



(Release ID: 1890924) Visitor Counter : 144