பிரதமர் அலுவலகம்

தேர்வு குறித்த உரையாடலில் அனைவரும் பங்கேற்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

Posted On: 04 JAN 2023 9:39PM by PIB Chennai

நடப்பாண்டில் தேர்வு குறித்த உரையாடல் நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த தனித்துவமான உரையாடலில் அனைவரும் பங்கேற்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:

தேர்வு குறித்த உரையாடல் நிகழ்ச்சி மிகவும் உற்சாகமுடையதாகவும், தேர்வை பதட்டமின்றி எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பாக அமைந்து தேர்வு எழுதுவோருக்கு  ஆதரவாக இருக்கிறது. இம்மாதம் 27-ந் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை நான் எதிர்நோக்கியுள்ளேன். இந்த தனித்துவமான உரையாடலில் அனைவரும் பங்கேற்குமாறு உங்களை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

***

(Release ID: 1888701)

IR/AG/RR



(Release ID: 1888778) Visitor Counter : 108