பிரதமர் அலுவலகம்
2022-ல் வேட்டைச் சம்பவங்கள் இல்லாத ஆண்டாக முடிவடைந்திருப்பதை அடுத்து அசாம் மக்களின் காண்டாமிருக பாதுகாப்பு முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு
Posted On:
03 JAN 2023 3:15PM by PIB Chennai
2022 ஆம் ஆண்டில் வேட்டைச் சம்பவங்கள் முற்றிலும் இல்லாத ஆண்டாக நிறைவடைந்திருக்கும் நிலையில், காண்டாமிருகத்தைப் பாதுகாக்கும் அசாம் மாநில மக்களின் முயற்சிகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அசாம் மாநில முதலமைச்சர் திரு.ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் ட்விட்டரை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“இது மிகப் பெரிய செய்தி! காண்டாமிருகங்களைப் பாதுகாப்பதில் அசாம் மாநில மக்கள் காட்டியுள்ள வழிமுறைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்”.
*****
(Release ID: 1888300)
PKV/RR/RK
(Release ID: 1888355)
Read this release in:
Bengali
,
Kannada
,
Assamese
,
Manipuri
,
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam