பிரதமர் அலுவலகம்
பேறுகால இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதற்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
30 NOV 2022 4:36PM by PIB Chennai
பேறு கால தாய், சேய் இறப்பு விகிதம் 2014-16-ல் ஒரு லட்சத்துக்கு 130-ஆக இருந்த நிலையில் 2018-20-ல் ஒரு லட்சத்துக்கு 97-ஆக குறைந்துள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான அனைத்து அம்சங்களும் மிகவும் வலுவாக இருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி, பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இது மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. இந்த மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து, நமது செயல்பாடுகள் வலுவாக உள்ளன" என்று பிரதமர் கூறியுள்ளார்.
**************
(Release ID: 1879987)
SM/PLM/KG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1880038)
வருகையாளர் எண்ணிக்கை : 226
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam