பிரதமர் அலுவலகம்

ஜி-20 உச்சி மாநாட்டையொட்டி இங்கிலாந்து பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு

Posted On: 16 NOV 2022 3:47PM by PIB Chennai

பாலியில் நடைபெறும்  ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் மேன்மை தங்கிய ரிஷி சுனக்-கை சந்தித்துப் பேசினார்.

இருநாட்டு தலைவர்களின் முதல் சந்திப்பு இதுவாகும். அப்போது இங்கிலாந்து பிரதமராக சுனக்  பொறுப்பேற்றதற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது இந்தியா-இங்கிலாந்து இடையே பரந்த அளவிலான கூட்டாண்மை மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும், ஜி-20 மற்றும் காமன்வெல்த் உள்ளிட்ட அமைப்புகளில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்து இரு தலைவர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வர்த்தகம், போக்குவரத்து, பாதுகாப்பு, பந்தோபஸ்து போன்ற  முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

**********  

SMB/KG/KRS

(Release ID: 1876456)



(Release ID: 1876545) Visitor Counter : 224