பிரதமர் அலுவலகம்

கர்நாடக சட்டபேரவை துணைத் தலைவர் திரு ஆனந்த் மாமணி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 23 OCT 2022 12:13PM by PIB Chennai

கர்நாடக சட்டப்பேரவை துணைத் தலைவர் திரு ஆனந்த் மாமணியின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்  கூறியிருப்பதாவது:

 

“கர்நாடக சட்டப்பேரவையின் துணைத் தலைவர் திரு ஆனந்த் மாமணியின் மறைவு வேதனை அளிக்கிறது. சமூக மேம்பாட்டிற்காகப் பெரிதும் பாடுபட்ட மகத்தான தலைவர். கர்நாடகம் முழுவதும் பிஜேபியை வலுப்படுத்தவும் அவர் உழைத்தார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி."

 

***************



(Release ID: 1870437) Visitor Counter : 119