பிரதமர் அலுவலகம்

இலகுரக போர் ஹெலிகாப்டர் ‘பிரசந்தா’ அறிமுகம் ஒரு சிறப்பு வாய்ந்த தருணம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்

Posted On: 03 OCT 2022 9:45PM by PIB Chennai

பாதுகாப்புப் படையில் இலகுரக போர் ஹெலிகாப்டரான  ‘பிரசந்தா’ இணைக்கப்பட்டதையடுத்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஒவ்வொரு இந்தியருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கின் ட்விட்டர் பதிவை   மேற்கோள் காட்டி, பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.

“இலகுரக போர் ஹெலிகாப்டரான ‘பிரசந்தா’ அறிமுகம், 130 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியுடன், தேசத்தை வலுவாகவும், பாதுகாப்புத் துறையை தன்னிறைவு பெற்றதாகவும் மாற்றுவதற்கான ஒரு சிறப்பான தருணமாகும். ஒவ்வொரு இந்தியருக்கும் வாழ்த்துக்கள்!”

*****



(Release ID: 1864976) Visitor Counter : 146