பிரதமர் அலுவலகம்
திரு. பிஷ்ணு சரண் சேத்தியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
19 SEP 2022 2:19PM by PIB Chennai
ஒடிசா மாநில பிஜேபி பிரிவு தலைவர் திரு.பிஷ்ணு சரண் சேத்தியின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
“ஒடிசா மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு திரு.பிஷ்ணு சரண் சேத்தி சிறப்பான பங்களிப்பை வழங்கினார். கடின உழைப்பின் மூலம் சிறந்த சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய அவர், சமூகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றினார். அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஒம் சாந்தி”
**************
Release ID: 1860537
(Release ID: 1860547)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam