பிரதமர் அலுவலகம்

பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் வெண்கலப் பதக்கம் வென்ற சவுரவ் கோஷலுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 03 AUG 2022 11:30PM by PIB Chennai

பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“சவுரவ் கோஷல் @SauravGhosal வெற்றியின் புதிய உச்சங்களை எட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பர்மிங்ஹாமில் அவர் வென்றுள்ள வெண்கலப் பதக்கம் சிறப்பு வாய்ந்தது. அவருக்கு நல்வாழ்த்துகள். அவரது வெற்றி, இந்திய இளைஞர்களிடையே ஸ்குவாஷ் விளையாட்டை பிரபலப்படுத்த உதவுவதாக இருக்கட்டும்.” 
**

(Release ID: 1848152)



(Release ID: 1848197) Visitor Counter : 89