பிரதமர் அலுவலகம்
காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் லான் பவுல்ஸ் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற லவ்லி சௌபே, பிங்கி சிங், நயன்மோனி சைக்கியா, ரூபா ராணி டர்க்கி ஆகியோருக்கு பிரதமர் பாராட்டு
Posted On:
02 AUG 2022 8:03PM by PIB Chennai
பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் லான் பவுல்ஸ் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற லவ்லி சௌபே, பிங்கி சிங், நயன்மோனி சைக்கியா, ரூபா ராணி டர்க்கி ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“பர்மிங்ஹாமில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி! லான் பவுல்ஸ் விளையாட்டில் மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ள லவ்லி சௌபே, பிங்கி சிங், நயன்மோனி சைக்கியா, ரூபா ராணி டர்க்கி ஆகியோரால் இந்தியா பெருமை கொள்கிறது. சிறப்பான திறமையைக் குழுவினர் வெளிப்படுத்தியதோடு, அவர்களது வெற்றி லான் பவுல்ஸ் விளையாட்டில் பல இந்தியர்களை ஊக்குவிக்கும்.”
***
(Release ID: 1847565)
(Release ID: 1847727)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam