பிரதமர் அலுவலகம்

காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை பிந்தியாராணி தேவிக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 31 JUL 2022 8:11AM by PIB Chennai

பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை பிந்தியாராணி தேவிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியதாவது:

 

“பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிந்தியாராணி தேவிக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி, அவரது விடா முயற்சியின் வெளிப்பாடாக அமைந்திருப்பதோடு, ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

***************



(Release ID: 1846714) Visitor Counter : 168