மத்திய அமைச்சரவை

1.64 லட்சம் கோடி மதிப்பிலான பிஎஸ்என்எல்-ன் மறுசீரமைப்புத் தொகுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 27 JUL 2022 5:16PM by PIB Chennai

கிராமப்புறங்களில் தொலைத்தொடர்பு சேவைகளை விரிவுபடுத்துதல், உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றில் பிஎஸ்என்எல் முக்கிய பங்கு வகிக்கிறது.

பிஎஸ்என்எல்-ஐ நிதி ரீதியாக லாபகரமாக மாற்ற, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று பிஎஸ்என்எல்-ன் ரூ.1.64 லட்சம் கோடி மதிப்பிலான மறுசீரமைப்புத் தொகுப்பு ஒப்புதல் அளித்தது

பிஎஸ்என்எல் சேவைகளை மேம்படுத்துவதற்கு புதிய மூலதனம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, அதன் இருப்புநிலைக் குறைப்பு மற்றும் பாரத் பிராட்பேண்ட் நிகாம் நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைப்பதன் மூலம் பைபர் நெட்வொர்க்கை அதிகரித்தல் ஆகிய மறுசீரமைப்புகள் மூலம் பிஎஸ்என்எல் சேவைகள் மேம்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1845422

***************



(Release ID: 1845529) Visitor Counter : 347