பிரதமர் அலுவலகம்

8-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, மைசூரில் உள்ள மைசூர் அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற யோகா கண்காட்சியில் பிரதமர் பங்கேற்றார்


மைசூரில் பிரதமரின் யோகா நிகழ்ச்சியுடன், நாடு முழுவதும் 75 ஐகானிக் இடங்களில் பெருமளவில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது

நாடு முழுவதும் பல்வேறு அரசு சாரா நிறுவனங்களால், கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பெரிய அளவிலான யோகா நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

மைசூருவில் பிரதமரின் யோகா நிகழ்ச்சி 'ஒரே சூரியன், ஒரே பூமி' என்ற கருத்தை வலியுறுத்தும் ‘கார்டியன் யோகா ரிங்' என்ற புதுமையான முயற்சி

"யோகா என்பது தனிநபருக்கானது அல்ல முழு மனித குலத்திற்கும் ஆனது "

"யோகா நமது சமூகம், நாடு, உலகம் ஆகியவற்றிற்கு அமைதியைத் தருகிறது மற்றும் யோகா நமது பிரபஞ்சத்திற்கு அமைதியைக் கொண்டுவருகிறது"

"யோகா தினம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆற்றலைக் கொடுத்த இந்தியாவின் அமிர்த உணர்வை ஏற்றுக்கொள்வதாகும்"

"இந்தியாவின் வரலாற்று தளங்களில் நடைபெறும் கூட்டு யோகா பயிற்சி அனுபவம் இந்தியாவின் கடந்த காலத்தையும், இந்தியாவின் பன்முகத்தன்மையையும், இந்தியாவின் விரிவாக்கத்தையும் ஒன்றாக இணைப்பது போன்றது"

"யோகப் பயிற்சி

Posted On: 21 JUN 2022 8:11AM by PIB Chennai

8-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று மைசூரில் உள்ள மைசூர் அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர். கர்நாடக ஆளுநர் திரு. தாவர் சந்த் கெலாட், கர்நாடக முதல்வர் திரு. பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மைசூர் போன்ற இந்தியாவின் ஆன்மீக ங்களின் பல நூற்றாண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த யோக முறை இன்று உலக சுகாதாரத்திற்கு வழிகாட்டியாக மாறியுள்ளது என்றார். இன்று யோகா உலகளாவிய ஒத்துழைப்பிற்கான அடிப்படையாக மாறி, மனித குலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வின் நம்பிக்கையை வழங்குகிறது, என்று பிரதமர் கூறினார். யோகா என்பது இன்று வீடுகளையும் தாண்டி உலகம் முழுவதும் பரவி வருவதை நாம் காண்கிறோம். இது ஆன்மீக உணர்தல் குறிப்பாக, முன்னெப்போதும் இல்லாத அளவு தொற்று பரவிவந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் இயற்கையான மற்றும் பகிரப்பட்ட மனித உணர்வை மெருகேற்றியது யோகா என்று அவர் கூறினார். “யோகா இப்போது உலகளாவிய திருவிழாவாக மாறிவிட்டது. யோகா என்பது எந்த ஒரு தனி மனிதனுக்கும் சொந்தம் அல்ல, ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் உரியது. எனவேதான், இம்முறை சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் - மனிதகுலத்திற்கான யோகா”, என்று பிரதமர் கூறினார். இந்த கருப்பொருளை உலகளவில் எடுத்துச் சென்றதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இந்திய முனிவர்களை மேற்கோள் காட்டி பிரதமர், “யோகா நமக்கு அமைதியைத் தருகிறது. யோகாவின் அமைதி என்பது தனிநபர்களுக்கு மட்டும் அல்லாமல் யோகா நமது சமூகத்திற்கு அமைதியை ருகிறது. யோகா நமது நாடுகளுக்கும் உலகிற்கும் அமைதியைக் கொண்டுவருகிறது. மேலும், யோகா நமது பிரபஞ்சத்திற்கு அமைதியைக் கொண்டுவருகிறது.”, என்று கூறினார். மேலும், “இந்த முழுப் பிரபஞ்சமும் நமது உடலிலிருந்தும் ஆன்மாவிலிருந்தும் தான் தொடங்குகிறது. பிரபஞ்சம் நம்மில் இருந்துதான் தொடங்குகிறது. யோகா நமக்குள் இருக்கும் ஆன்மாவை நமக்கு உணர்த்துகிறது மற்றும் விழிப்புணர்வை உருவாக்குகிறது", என்று கூறினார்.

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் ‘அமிர்த பெருவிழாவை’ கொண்டாடும் தருணத்தில் இந்தியா யோகா தினத்தை கொண்டாடுகிறது என்பதை பிரதமர் குறிப்பிட்டார். யோகா தினம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆற்றலைக் கொடுத்த இந்தியாவின் அமிர்த உணர்வை ஏற்றுக்கொள்வதாகும். அதனால்தான், இந்தியாவின் புகழ்பெற்ற, வரலாற்றின் சாட்சியாகவும் கலாச்சார ஆற்றலின் மையமாகவும் விளங்கும், நாடு முழுவதும் உள்ள சிறப்புமிக்க இடங்களில் பெரிய அளவில் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. "இந்தியாவின் வரலாற்று தளங்களில் நடைபெறும் கூட்டு யோகா பயிற்சி அனுபவம் இந்தியாவின் கடந்த காலத்தையும், இந்தியாவின் பன்முகத்தன்மையையும், இந்தியாவின் விரிவாக்கத்தையும் ஒன்றாக இணைப்பது போன்றது" என்று அவர் கூறினார். தேசிய எல்லைகளைத் தாண்டி ஒருங்கிணைக்கும் யோகாவின் சக்தியை உணர்த்துவதற்காக வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் இணைந்து, 79 நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டுப் யோகா முயற்சியான ‘கார்டியன் யோகா ரிங்’ என்ற அற்புதமான நிகழ்ச்சியைப் பற்றியும் பிரதமர் விளக்கினார். உலகம் முழுவதும் எப்படி சூரியன் கிழக்கிலிருந்து மேற்காக நகர்கிறதோ, அதேபோல் பூமியின் ஏதேனும் ஒரு புள்ளியில் இருந்து பார்த்தால், பங்கேற்கும் நாடுகளில் நடைபெறும் பெருமளவிலான யோகா நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக 'ஒரு சூரியன், ஒரே பூமி' என்பது போல் தெரியும். "இந்த யோகா பயிற்சிகள் ஆரோக்கியம், சமநிலை மற்றும் ஒத்துழைப்புக்கு அற்புதமான உத்வேகத்தை அளிக்கின்றன", என்று அவர் மேலும் கூறினார்.

யோகா நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக அல்லாமல், இன்று அது நமது வாழ்க்கை முறையாக மாறிவிட்டது என்று திரு மோடி சுட்டிக்காட்டினார். யோகா ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கும் இடத்திற்குமானது என்று கட்டுப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை.  “நாம் எவ்வளவு மன அழுத்ததில் இருந்தாலும், சில நிமிட தியானம் நம்மை ஆசுவாசப்படுத்தி, நமது உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது. எனவே, யோகாவை கூடுதல் வேலையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. நாம் யோகாவை அறிந்து கொள்ள வேண்டும், நாம் யோகாவை வாழ வேண்டும். நாம் யோகத்தை அடைய வேண்டும், யோகத்தை கடைப்பிடிக்க வேண்டும். நாம் யோகாவை வாழத் தொடங்கும் போது, நாம் தினம் செய்ய வேண்டிய பயிற்சியாக அல்ல, நமது ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அமைதியைக் கொண்டாடுவதற்கான ஒரு ஊடகமாக யோகா மாறும்.” என்று பிரதமர் கூறினார்.

யோகாவுடன் தொடர்புடைய எல்லையற்ற சாத்தியக்கூறுகளை உணர வேண்டிய தருணம் இன்று, என்று பிரதமர் கூறினார். இன்று நமது இளைஞர்கள் அதிக அளவில் யோகா துறையில் புதிய புதிய  சிந்தனைகளுடன் வருகிறார்கள். ஆயுஷ் அமைச்சகத்தின் ஸ்டார்ட்அப் யோகா சவால் குறித்தும் அவர் தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டிற்கான யோகா மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பிற்கான பிரதமர் விருதுகள் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவுடன் ஒருங்கிணைத்து 8வது சர்வதேச யோகா தின கொண்டாடுவதற்காக, 75 மத்திய அமைச்சர்கள் தலைமையில் நாடு முழுவதும் 75  சிறப்புமிக்க இடங்களில் பெரியளவிலான யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்சிகளுக்கு பிரதமர் தலைமையில் மைசூரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி முன்னோடியாக அமைந்தது. பல்வேறு கல்வி, சமூக, அரசியல், கலாச்சார, மத, பெருநிறுவன மற்றும் பிற சிவில் சமூக அமைப்புகளால் யோகா நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் பல்வேறு  இடங்களில் நடத்தப்படுகின்றன, இதில் கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றனர்.

தேசிய எல்லைகளைத் தாண்டி ஒருங்கிணைக்கும் யோகாவின் சக்தியை உணர்த்துவதற்காக வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் இணைந்து, 79 நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டுப் யோகா முயற்சியான ‘கார்டியன் யோகா ரிங்’ என்ற அற்புதமான நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிரதமர் பங்கேற்ற மைசூர் யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2015 முதல், சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள் "மனிதகுலத்திற்கான யோகா" என்பதாகும். கோவிட் தொற்றுநோய் காலத்தின் போது நமது வேதனையைப் போக்க யோகா மனிதகுலத்திற்கு எவ்வாறு சேவை செய்தது என்பதை இந்த ஆண்டு கருப்பொருள் சித்தரிக்கிறது.

***************



(Release ID: 1835780) Visitor Counter : 194