மத்திய அமைச்சரவை

கூட்டுறவு அமைப்புகளை வாங்குவோராக அனுமதிக்கும் வகையில் அரசு இ-சந்தை கொள்முதல் விரிவாக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 01 JUN 2022 4:38PM by PIB Chennai

கூட்டுறவு அமைப்புகளை வாங்குவோராக அனுமதிக்கும் வகையில் அரசு இ-சந்தை கொள்முதல் விரிவாக்கத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2016 ஆகஸ்ட் 9 அன்று தொடங்கப்பட்ட அரசு இ-சந்தையில் மத்திய- மாநில அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை தற்போது கொள்முதல் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் துறையினர் அரசு இ-சந்தையில் கொள்முதல் செய்ய இயலாது.  தற்போது கூட்டுறவு அமைப்புகளை வாங்குவோராக அனுமதித்திருப்பதன் மூலம் 27 கோடி உறுப்பினர்களை கொண்டுள்ள 8.54 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு அமைப்புகள் பயனடையும்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1830120

***************



(Release ID: 1830135) Visitor Counter : 244