பிரதமர் அலுவலகம்

புத்தபூர்ணிமா அன்று பகவான் புத்தரின் கோட்பாடுகளை பிரதமர் நினைவுகூர்கிறார்

Posted On: 16 MAY 2022 9:11AM by PIB Chennai

புத்தபூர்ணிமாவை முன்னிட்டு பகவான் புத்தரின் கோட்பாடுகளை நினைவுகூர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவற்றை நிறைவேற்றும் தமது உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்தார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

புத்தபூர்ணிமா அன்று பகவான் புத்தரின் கோட்பாடுகளை நாம் நினைவுகூர்வதுடன், அவற்றை நிறைவேற்றும் நமது உறுதித் தன்மையையும் வலியுறுத்துகிறோம்பகவான் புத்தரின் சிந்தனைகள் நமது பூமியை மேலும் அமைதியானதாகவும், இணக்கமானதாகவும், நிலையானதாகவும் மாற்றக்கூடும்.

•••••••••••••

 



(Release ID: 1825735) Visitor Counter : 165