பிரதமர் அலுவலகம்

குருதேவ் தாகூரின் பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் வணக்கம் செலுத்தினார்

Posted On: 09 MAY 2022 8:58AM by PIB Chennai

குருதேவ் தாகூரின் பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வணக்கம் செலுத்தினார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

குருதேவ் தாகூரின்  பிறந்த நாளில் அவருக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். சிந்தனையிலும், செயலிலும் லட்சக்கணக்கான மக்களை அவர் தொடர்ந்து ஈர்த்து வந்தார்.  நமது தேசம் குறித்தும் கலாச்சாரம் குறித்தும், நெறிமுறைகள் குறித்தும், பெருமிதம் கொள்ள நமக்கு அவர் போதித்தார். கல்வி, புதியன கற்றல், சமூக அதிகாரம் ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார்.   அவரது தொலைநோக்குப் பார்வையை இந்தியாவில் நிறைவேற்ற நாங்கள் உறுதியேற்றுள்ளோம்.” 

*****



(Release ID: 1823882) Visitor Counter : 139