பிரதமர் அலுவலகம்
ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் இரங்கல்
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு அறிவிப்பு
प्रविष्टि तिथि:
19 APR 2022 7:33PM by PIB Chennai
ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் நிவாரணமாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் தமது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
“ஜுன்ஜுனு மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்படும். அதேபோல், காயமடைந்தவர்களுக்கு தலா
ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும்”
***************
(Release ID: 1818143)
(रिलीज़ आईडी: 1818261)
आगंतुक पटल : 203
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam