பிரதமர் அலுவலகம்

இமாச்சல தினத்தை முன்னிட்டு பிரதமரின் வாழ்த்து செய்தியின் தமிழாக்கம்

Posted On: 15 APR 2022 1:22PM by PIB Chennai

வணக்கம்!

இமாச்சல தினத்தில் தேவபூமியை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

நாடு சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டில், இமாச்சலப் பிரதேசமும் தனது 75-வது நிறுவன தினத்தைக் கொண்டாடுவது ஒரு அற்புதமான தற்செயல் நிகழ்வு! 'விடுதலையின் அமிர்தப் பெருவிழா' காலத்தில், வளர்ச்சியின் அமிர்தம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து சென்றடைவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

அடல் அவர்கள் இமாச்சலத்தைப் பற்றி ஒருமுறை இவ்வாறு எழுதியிருந்தார்.

பனி மூடிய மலைகள்,

 ஆறுகள், அருவிகள், காடுகள்,

நல்லவற்றின் நாடு,

கடவுள்களின் இருப்பிடம்!

அதிர்ஷ்டவசமாக, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியுள்ள இமாச்சல மக்கள் மத்தியில் வாழவும் எனக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு சிறிய மலைப் பிரதேசமாக, கடினமான சூழ்நிலைகள் மற்றும் கடினமான நிலப்பரப்புடன், சாத்தியக்கூறுகளை விட அதிக சவால்கள் இங்கு இருந்தன. ஆனால் இமாச்சலத்தின் விடாமுயற்சி, நேர்மையான மற்றும் கடின உழைப்பாளி மக்கள் இந்த சவாலை வாய்ப்புகளாக மாற்றியுள்ளனர்.

தோட்டக்கலை, உபரி மின்சாரம், கல்வியறிவு விகிதம், கிராமப்புற சாலைகள், வீட்டுக்கு வீடு தண்ணீர் மற்றும் மின்சார வசதி போன்ற பல அளவுருக்கள் இந்த மலை மாநிலத்தின் முன்னேற்றத்தைக் காட்டுகின்றன.

கடந்த 7-8 ஆண்டுகளாக, இமாச்சலப் பிரதேசத்தின் நிலை, அங்குள்ள வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எங்கள் இளம் சகாவான இமாச்சலத்தின் முதல்வர் ஜெய்ராம் அவர்களுடன் இணைந்து கிராமப்புற சாலைகளை விரிவுபடுத்துதல், நெடுஞ்சாலையை விரிவுபடுத்துதல் மற்றும் ரயில்வே வலையமைப்பை விரிவாக்குதல் போன்ற முயற்சிகளை இரட்டை இயந்திர அரசாங்கம் எடுத்துள்ளது.

இணைப்புகள் மேம்பட்டு வருவதால், இமாச்சலின் சுற்றுலா புதிய உயரங்களை எட்டி வருகிறது. ஒவ்வொரு புதிய பிராந்தியமும் சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கை, கலாச்சாரம் மற்றும் சாகசத்தின் அடிப்படையில் புதிய அனுபவங்களை வழங்குகின்றன,

மேலும் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான முடிவற்ற சாத்தியங்களை அவை திறக்கின்றன. சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸுக்கு எதிரான விரைவான தடுப்பூசி வழங்கல் மூலம் அதன் விளைவைக் கண்டோம்.

நண்பர்களே,

இமாச்சலப் பிரதேசத்தின் முழுத் திறனையும் வெளிக்கொணர விரைவான வேகத்தில் நாம் பணியாற்ற வேண்டும். வரும் 25 ஆண்டுகளில், இமாச்சலப் பிரதேசம் உருவாகி 100 ஆண்டுகள் நிறைவடைவதுடன், நாடு சுதந்திரம் அடைந்த நூற்றாண்டையும் காண்போம். இந்த அமிர்த காலகட்டத்தில் சுற்றுலா, உயர்கல்வி, ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், இயற்கை விவசாயம் போன்ற துறைகளில் இமாச்சலத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இமாச்சலப் பிரதேசத்தில் தொலைதூர இணைப்பை அதிகரிக்கும், சுற்றுலாவை மேம்படுத்தும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.  

நண்பர்களே,

மத்திய அரசின் நலத்திட்டங்கள் ஜெய்ராம் அவர்களின் அரசு மற்றும் அவரது குழுவினரால் மிகவும் சிறப்பாக எடுத்து செல்லப்பட்டுள்ளன. குறிப்பாக, சமூக பாதுகாப்பில் இமாச்சலம் ஒரு பாராட்டத்தக்க வேலையைச் செய்துள்ளது. நேர்மையான தலைமை, அமைதியை விரும்பும் சூழல், தெய்வங்களின் ஆசீர்வாதம் மற்றும் இமாச்சலத்தின் கடின உழைப்பாளி மக்கள்; இவை எல்லாம் இணையற்றது. இமாச்சலப் பிரதேசம் விரைவான வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது. வளமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்குவதில் இமாச்சல் தொடர்ந்து பங்களிக்கும் என்று நம்புகிறேன்!

மிக்க நன்றி!

குறிப்பு: பிரதமர் இந்தியில் வழங்கிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு இதுவாகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817022

*******



(Release ID: 1817283) Visitor Counter : 161