பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஐதராபாதின் போய்குடாவில் சோகமான தீ விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்; பலியானோரின் குடும்பத்திற்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 23 MAR 2022 11:30AM by PIB Chennai

ஐதராபாதின் போய்குடாவில் சோகமான தீ விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2லட்சம் கருணைத் தொகை வழங்கவும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தொடர்ச்சியான டுவிட்டர்களில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது;

ஐதராபாதின் போய்குடாவின் சோகமான தீ விபத்தின் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. இந்த சோகமான தருணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது இரங்கல். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும்: PM @narendramodi"

***


(வெளியீட்டு அடையாள எண்: 1808592) வருகையாளர் எண்ணிக்கை : 239