பிரதமர் அலுவலகம்

ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபுரமு மாவட்டத்தில் ஏற்பட்ட சோகமான விபத்து காரணமாக உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல்

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிஎம்என்ஆர்எஃப் நிதியிலிருந்து கருணைத் தொகை வழங்க ஒப்புதல்

Posted On: 07 FEB 2022 9:52AM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபுரமு மாவட்டத்தில் ஏற்பட்ட கோரமான விபத்து காரணமாக உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தோர் குடும்பங்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண (பிஎம்என்ஆர்எஃப்) நிதியிலிருந்து கருணைத் தொகை வழங்கவும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

 பிரதமர் அலுவலக டுவிட்டரில் கூறியிருப்பதாவது ;

“ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபுரமு மாவட்டத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் துயரடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிஎம்என்ஆர்எஃப் நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும்: பிரதமர்”

***************

(Release ID: 1796034)



(Release ID: 1796061) Visitor Counter : 195